தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் வட இந்திய பயணிகள் திடீரென அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடையூறு

கடந்த செவ்வாய்கிழமை (டிச.,27) ‘தாய் ஸ்மைல்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல புறப்பட்டது. டாக்ஸிவேயில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, இருக்கையில் அமர்ந்திருந்த வட இந்திய பயணி ஒருவர் தனது சீட்டை சாய்த்துக்கொண்டுதாக கூறப்படுகிறது. இது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்து, இருக்கையை நேராக்கிக்கொள்ளுங்கள் விமான பணிப் பெண் கூறியுள்ளார். அப்போது அந்த பயணி வாதம் செய்தாக சொல்லப்படுகிறது.

சரமாரி தாக்குதல்

இந்நிலையில், அதே விமானத்தில் பயணித்த மற்றொரு வட இந்திய பயணி வந்து, சம்மந்தப்பட்ட பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்குள்ளும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதனை கவனித்த மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து , இடையூறு ஏற்படுத்திய பயணியை சரமாரியாக அடித்து உதைத்தனர். விமான பெண் ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் அவர்களாகவே சண்டையை முடித்துக்கொண்டு அவரவர் சீட்டுக்கு சென்றதும் விமானம் கிளம்பியது. பயணிகள் அடித்துக் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று, இண்டிகோ விமானத்தில் விமான ஊழியரை திட்டியதாக விமான பணிப்பெண் ஒருவர் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் ரிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here