விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகையும், அமைச்சருமான ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

முன்னணி நடிகை

தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

தீவிர அரசியல்

பின்னர் அரசியலில் தீவிரம் காட்டிய அவர், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்க செல்லும்போது மக்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரோஜா.

குத்துவிட்ட ரோஜா

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ரோஜா, திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட மைதானத்தில் இறங்கினார். அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ரோஜாவின் குத்துச் சண்டை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரோஜா, கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here