பிரபல நடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பணமோசடி சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலையில் மட்டும் கவனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எப்போது, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அஜித்திற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எந்தவித வம்புகளிலும் சிக்காமல் அவரது வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் அஜித்குமார், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார்.

பண மோசடி

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் பெயரை பயன்படுத்தி ரூ.1.10 லட்சம் மோசடி நடந்துள்ளது. நெல்லை விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அஜித்குமார் ரசிகர் மன்றம் சார்பில் வீடு கட்டித் தருவதாக கூறி சிவா என்பவர் ரூ.1.10 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ராஜேஸ்வரியின் இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here