திருமணம் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப்ப வேண்டாம் என்ரும் நடிகை தமன்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னணி நடிகை

17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, பாகுபலி போன்ற பல மெகா ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார். 17 வருட சினிமா பயணத்தில், பல ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நானே சொல்றேன்

இந்த நிலையில் நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், ”நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடம் சினிமாவில் நீடிப்பேன் என்று நினைக்கவில்லை. சகஜமாகவே பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள். எங்கள் வீட்டில் கூட என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். வரன் கூட தேடுகிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன். என் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here