சென்னையில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ்-ஐ நோயிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

மெட்ராஸ்-ஐ

விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸே மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பாதுகாப்பாக இருங்கள்

இந்த நிலையில், சென்னையில் வேகமாக மெட்ராஸ்-ஐ பரவி வருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 5 நாட்களில் இது குணமடையும் என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here