சென்னையிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை ஆந்திராவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்து

சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா நோக்கி சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரத்து

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here