தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்றம் – இறக்கம்

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இதனிடையே தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், குறைந்தும் வந்தது.

அதிரடி உயர்வு

இந்நிலையில், திடீரென தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.456 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,815-க்கும், ஒரு சவரன் ரூ.38,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here