”காந்தாரா” படம் பார்க்கையில் தன் உடல் சிலிர்த்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஹிட் படம்

கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னட திரைப்படம் ‘காந்தாரா’. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த 15ஆம் தேதி வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ரஜினி பாராட்டு

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ”காந்தாரா”’ படத்தைப் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது; “தெரிந்ததை விட தெரியாதது அதிகம் என்பதை இதைவிட யாரும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. ”காந்தாரா” படம் பார்க்கையில் என் உடல் சிலிர்த்துவிட்டது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராகப் பணியாற்றியுள்ள ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆஃப். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படத்தைக் கொடுத்ததற்காக ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் பாராட்டுக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here