நடிகை பூர்ணா தனக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகை

மலையாள நடிகையான பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சவரக்கத்தி’, தலைவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

நடிகை பூர்ணாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிஃப் அலி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் ஆனது. நிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திருமணம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாததால், இவர்களது திருமணம் நிச்சயத்துடன் நின்றுவிட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து தனது வருங்கால கணவருக்கு முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பூர்ணா.

திருமணம்

இந்நிலையில், நடிகை பூர்ணாவின் திருமணம் துபாயில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை பூர்ணா, தனக்கும் ஆசிப் அலிக்கும் திருமணம் நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பூர்ணாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வேலையில், அவரது ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here