பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை மீனா வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராமன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ஐந்து மொழிகளில் வெளியானது. லட்சக்கணக்கான ரசிகர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

பொறாமை

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மீனா குறிப்பிட்டுள்ளாவது; இதற்கு மேல் என்னால் ரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது. எனக்கு பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன். ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு நடிகை குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here