மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

காலை சிற்றுண்டி திட்டம்

அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ரூ.33.56 கோடியில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து முதல்வர் உணவு அருந்தினார்.

பசியை போக்குவதே இலக்கு

இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என்றார். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எத்தகைய நிதிச்சுமை வந்தாலும் பசிசுமையை போக்குவதே அரசின் இலக்கு எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here