குழந்தை பிறக்க திருமணம் அவசியமில்லை என்று பிரபல நடிகை தபு அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை

இந்தி திரையிலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. இந்தி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிறைச்சாலை உள்ளிட்ட படங்களில் தபு நடித்துள்ளார். தற்போது 50 வயதான தபு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்.

அவசியமில்லை

இதுதொடர்பாக சமீபத்தில் தபு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது; “எனக்கு எல்லாரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. திருமணம் ஆகாவிட்டால் கூட கர்ப்பம் ஆகலாம். வாடகை தாய் மூலமாக குழந்தை பெறலாம். நான் தாயாக விரும்பினால் இதில் ஒன்றை தேர்ந்தெடுப்பேன். திருமணம் அவசியமான ஒன்று அல்ல. தற்போது எனது திரை வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன்”. இவ்வாறு தபு பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here