‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரபல இயக்குநர் கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கமல்ஹாசன் அதில் ராகவன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். நாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோரும், வில்லனாக டேனியல் பாலாஜியும் நடித்து இருந்தனர். ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், நல்ல வசூலையும் பார்த்தது.

புதிய அப்டேட்

இந்த நிலையில், ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படப்பிடிப்பை தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

2-ம் பாகம்

ஏற்கனவே விஸ்வரூபம் 2-ம் பாகம் வந்தது. தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்த விக்ரம் படத்தின் 3-ம் பாகமும் தயாராக இருக்கிறது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டம் வைத்துள்ளனர். இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கவுதம் மேனன் கூறியிருக்கிறார். இதன்மூலம் கமல்ஹாசனுக்கான இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்பது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here