பிரபல நடிகை திரிஷா அரசியலில் குதிக்கப்போவதாக வெளியான தகவல் குறித்து அவரது தாய் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

என்றும் இளமை

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். என்றும் இளமை என்றால் அது நம்ம திரிஷா தான் என ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். 38 வயதை கடந்துவிட்ட திரிஷாவை பார்க்கும் அனைவருமே அவருக்கு 18 வயது என்றுதான் சொல்லத்தோன்றும் அளவிற்கு, தனது அழகால் சொக்க வைப்பவர் திரிஷா. அபியாக, ஜெஸ்ஸியாக, ஜானுவாக கொண்டாடப்படும் திரிஷாவின் இடத்தை, எந்த ஒரு தமிழ் நடிகையும் இதுவரை பிடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மீண்டும் திரிஷா – விஜய் இணைய இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 

எல்லாம் வதந்தி

இந்த நிலையில், நடிகை திரிஷா அரசியல் கட்சியில் குதிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தேசிய கட்சி ஒன்றில் நடிகை திரிஷா இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். திரிஷாவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றும் அவர் குறித்து பரவும் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here