தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருக்கும் சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-ம் ஆண்டிலிருந்து சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சினேகன், தனது அறக்கட்டளையின் பெயரில் தொடங்கப்பட்ட சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம் பெற்றிருந்ததாகவும், வழக்கறிஞர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here