சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்காள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்றம் – இறக்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் முதல் தேதியிலேயே மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து, தங்கம் விலை உயர்ந்தது. இதனால் தங்கம் சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் ஹாப்பி

இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீர் உச்சம் அடைந்தது. நேற்றையதினம் சவரனுக்கு ரூ.504 உயர்ந்து ரூ.38,920-க்கும், கிராம் ரூ.4,865-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.38,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here