கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க முயலும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. உடுப்பி நகரில் இருந்து நோயாளியுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வேறொரு இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்ற அந்த ஆம்புலன்ஸ், அவ்வழியே இருந்த சுங்கச்சாவடியை கடக்க முயலும் போது கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு பெரும் விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸில் நோயாளியும், அவருடன் இருந்த 2 உதவியாளர்களும் பலியாகினர். மேலும் அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியரும் பலியானார். காண்போரை பதைபதைக்க வைக்கும் இதன் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here