தமிழ், தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா அடுத்ததாக திரில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அண்மையில் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தார் சமந்தா. அதனைதொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படமும் இவரின் பங்களிப்பால் வெற்றி பெற்றது.

அசத்தல் ஆக்ஷன்

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது ‘யசோதா’ என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் மணிசர்மா இசை அமைத்துள்ளார். ‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தாவுடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார். ‘யசோதா’ படக்குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பிபையும் முடித்துள்ளது. இயக்குநர் கூட்டணியான ஹரி – ஹரிஷ் இணைந்து ‘யசோதா’ படத்தை இயக்குகின்றனர். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும், இந்த பான் இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு முடிவு செய்துள்ளது. திரில்லர் படமான ‘யசோதா’வில் மிக அற்புதமாக நடித்துள்ள சமந்தா, ஆக்‌ஷன் காட்சிகளில் முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டப்பிங் பணிகள் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here