நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பன்முகத்திறமை

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடன திறமைக்காக அவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கின்றனர். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா, பின்னர் நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக உருவெடுத்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் அக்‌ஷய் குமார், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வந்தார்.

பிஸி ஷெடுல்

தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா, தமிழில் மட்டும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “மை டியர் பூதம்” திரைப்படம் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் பிரபுதேவா, இதனையடுத்து பொய்கால் குதிரை, பகீரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அப்பாவைப் போல

இந்த நிலையில், பிரபுதேவா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் பாண்டுவிடம் தன் மகன் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தை பிரபுதேவா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களை மிஸ் செய்கிறேன். நேற்று முதல் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். புகைப்படத்தில் இருக்கும் பிரபுதேவாவின் மகன் தன் தந்தையைப் போலவேதாடி, மீசையுடன் காணப்படுகிறார். பிரபுதேவா போலவே அவரது மகன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here