லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தை பிற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஏ.பி. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

“தி லெஜண்ட்”

லெஜண்ட் சரவணா ஸ்டோரின்  உரிமையாளரான லெஜண்ட் சரவணன், கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களில் நடித்து வந்தார். இதன்மூலம் மக்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானார். பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவும் படத்தின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

பிரம்மாண்டத்தை வெளியிடும் நிறுவனம்

‘தி லெஜண்ட்’ திரைப்படம் வருகிற ஜுலை 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில், முன்னணி கதாநாயகிகள் 10 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகம் எங்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார். இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ஏ.பி. இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிறுவனம் கமல் நடித்த ‘விக்ரம்’ பட விநியோகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here