மதுரை தம்பதியிடம் ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக நடிகர் தனுஷ் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர். இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மகன் எனக்கூறி மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சீராய்வு மனு உள்ளிட்ட ஒருசில வழக்குகளை இந்த தம்பதியினர் தொடுத்தனர். ஆனால் அந்த வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, கஸ்தூரிராஜா நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாக குற்றம்சாட்டி கதிரேசன் – மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கு தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு மன்னிப்பு கோராவிட்டால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here