சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தொடர்ந்து அதிகரிப்பு

அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில், கடந்த 19ம் தேதி சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. 20ம் தேதி கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. அதேபோல், 21ம் தேதியும் சவரன் ரூ.192 உயர்ந்தது.

கவலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ.66.10-க்கும், ஒரு கிலோ ரூ.66.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here