சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு சிக்கும் பிரபலங்களில் முதல் இடத்தை பிடிப்பவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது நெபோடிசம் குறித்து கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் முட்கரண்டி மூலம் மட்டுமே சாப்பிட்டு வித்தியாசமாக பேசுகிறார்கள். எனவே, இவர்கள் எப்படி இந்திய ரசிகர்களோடு இணைய முடியும்?. பாலிவுட் வாரிசுகள் ‘வேக வைத்த முட்டைகள்’ போல இருக்கிறார்கள். இவ்வாறு கங்கனா தெரிவித்திருக்கிறார். மேலும் தான் யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here