கேரளாவில் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடல் அழகி

கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷகானா. மாடல் அழகியான இவர், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷகானா, கணவருடன் கோழிக்கோட்டில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் ஷகானா அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் அறையை திறந்து பார்த்த போது அங்கு ஷகானா ஜன்னலில் தூக்குபோட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஜ்ஜாத், கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷகானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணத்தில் மர்மம்

ஷகானா தனது 20வது வயது பிறந்தநாளை கொண்டாட அனைவரையும் அழைத்திருந்த நிலையில், அவர் தற்கொலை செய்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடிகை ஷகானாவின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here