இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டார்க் திராவிடன் – பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரது வாசகத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்று தமிழனாக இருக்க வேண்டும் அல்லது திராவிடனாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியன், திராவிடன், தமிழன் என்கிறீர்கள். ஏன் இவ்வளவு குழப்பம். நான் தமிழன் என்று யுவன் பெருமையாக கூறவேண்டும்.  யுவன் சின்ன பிள்ளை. அவருக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் நோக்கில் இருந்தால் அதுவே நோயாகிவிடும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here