திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாததால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் மண்டபத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here