கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் பகல் நேரங்களிலும் சாலைகளில் உலா வருவதுடன், பொதுமக்களின் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்துவது உண்டு. அங்குள்ள “படையப்பா” என்ற காட்டு யானை அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. எப்போதும் சாந்தமுடன் இருக்கும் அந்த “படையப்பா” இன்று திடீரென கோபமடைந்துவிட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்ததுடன், பேருந்தின் கண்ணாடியையும் சேதப்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள், “அவரு என்ன செய்ய போறாரு, அவரு பாட்டுக்கு போயிடுவாரு.. போயிடுங்கய்யா.. போயிடுங்க.. எனக் கூறியதும், “படையப்பா” யானை பேருந்திற்கு வழிவிட்டு சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here