தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்னா. கூலித் தொழிலாளியான இவருக்கு, 15 வயதில் மகன் உள்ளார். கஞ்சாவை அதிக அளவு எடுத்துக் கொண்டதால் அச்சிறுவனின் நிலை நாளுக்கு நாள் மோசமானது. இதனால் ஆத்திரமும், வேதனையும் அடைந்த அவரது தாய் ராம்னா, சிறுவனை தெருவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததுடன், கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். மிளகாய் பொடி எரிச்சல் தாளாத சிறுவன், இனிமேல் கஞ்சா பக்கம் போக மாட்டேன் என்று சொன்ன பிறகே அவரை கம்பத்தில் இருந்து விடுவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here