புதுச்சேரி அருகே மது பிரியர்களின் வசதிக்காக ஆற்றை கடக்க தெப்பம் அமைத்துக்கொடுத்த சாராயக்கடை உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செட்டிப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் சாராயக்கடைக்கு வரும் பக்கத்து கிராம மக்கள், சங்கராபரணி ஆற்றை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இந்த கடைக்கு வர முடியாமல் அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு குடிமகன்கள் சென்றுவிடுகின்றனர். இந்த காரணத்தால் கடை உரிமையாளருக்கு வருமானம் குறையவே, அவருக்கு வந்த மகா சிந்தனையின் அடிப்படையில் ஆற்றை கடந்து வர சாராய பிரியர்களின் வசதிக்காக தெப்பம் அமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மது அருந்த வந்த குடிமகன்களை எச்சரித்து அனுப்பியதுடன், கடை உரிமையாளரையும் அழைத்து கடுமையாக கண்டித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here