கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக வரும் 12-ம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி தமிழகம் வந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி ஒத்திவைப்பு

இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here