உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்.

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கடப்பாவில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளார் சமந்தா. ஆனால், சமந்தா கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாக தகவல் பரவியது. இதற்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். லேசான இருமல் இருந்ததால் சம்ந்தா மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டதாகவும், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here