நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் மீட்பு பணியில் திறம்பட செயல்பட்ட அரசுத்துறை மற்றும் உதவிய மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் அருண், விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவபடுத்தினார். தீயணைப்பு, காவல்துறை, வனத்துறை அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தி, பரிசு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியின்போது அனைவரும் உதவியதாக கூறினார். விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கிராம மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். நஞ்சப்பசத்திரம் மக்களின் உதவிக்கு கைமாறாக ஒராண்டு முழுவதும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here