பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை

இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். 2012-ம் ஆண்டு நடிகர் சயிப் அலி கானை திருமணம் செய்துகொண்ட அவருக்கு, 2016-ம் ஆண்டில் ஒரு மகன் பிறந்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அமீர் கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில், நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்களான இவர்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மும்பையில் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கரண் ஜோகர் வீட்டில் நடந்த ரீயூனியன் பார்ட்டியில்  கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். கரீனா கபூருக்கும், அவரது தோழிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here