உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கின் வாயோடு வாய்வைத்து ஊதி காப்பாற்றிய நபருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மயங்கிய குரங்கு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் சமத்துவபுரம் பகுதி உள்ளது. அங்கு சுற்றித்திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கியுள்ளது. இதனைப் பார்த்த அதே பகுதியை சேர்ந்த பிரபு என்ற கார் ஓட்டுநர், உடனடியாக குரங்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். குரங்கின் மார்பு பகுதியில் கை வைத்து அழுத்தியும், குரங்கின் வாயோடு தனது வாயை வைத்து ஊதி மூச்சு கொடுத்தும் முதலுதவி செய்தார். இதில் அந்த குரங்கு கண் விழித்த நிலையில், பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனதார பாராட்டு

பிரபு குரங்கை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், குரங்குக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய பிரபுவை பாராட்டியுள்ளர். “பிரபு சார் நீங்கள் சிறந்தவர்” என சிவகார்த்திகேயன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here