உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சிம்பு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

‘மாநாடு’ வெற்றி

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ‘மாநாடு’ பட வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இப்ட்டத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

நீங்க இல்லாமல் நான் இல்லை

நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவமனையில் இருந்து தான் வீடு திரும்பிவிட்டதாகவும், தற்போது மெல்ல குணமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் நீங்க இல்லாமல் நான் இல்லை எனவும் சிம்பு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here