ZEE5 தளத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ZEE5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதனை

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இத்திரைப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது. இது தொடர்பாக ZEE5 நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரண்மனை 3 திரைப்படம் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அளித்த பெரும் வரவேற்பினால் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் உற்சாகத்தில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அட்டகாசமான கதைகள்

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம் திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் வரிசையில் இணைந்துள்ளது. ZEE5 நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் “சித்திரை செவ்வானம்”. இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேக வெளியீடாக ZEE5 தளத்தில் டிசம்பர் 3-ல் வெளியாகியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here