தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88.

பலம் வாய்ந்த தலைவர்

ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த 2009-ம் ஆண்டு ரோசய்யா அம்மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24-ம் தேதி வரை மட்டுமே அவர் அப்பதவியில் நீடித்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக ரோசய்யா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திர அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்த ரோசய்யா, முதலமைச்சர் பதவியை துறந்தபோது கடும் அதிருப்தியில் இருந்தார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அவரை தமிழக ஆளுநராக நியமித்தது. 

மரணம்

இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு தமிழக ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். பதவிக்காலம் முடிந்து ஒய்வுபெற்ற பின்னர், ரோசய்யா அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஹைதராபாத்தில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சிலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோசய்யாவின் மறைவிற்கு, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here