கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். புனித்தின் இந்த திடீர் மறைவு, அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். தமிழ் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் சூர்யா புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here