வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (நவ.,11) சென்னையில் கரையை கடந்தது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில், புதன்கிழமை பிற்பகலில் பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் நேற்று (நவ.,11) மாலை வரை நீடித்தது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரரர்கள், காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here