சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.424 அதிகரித்துள்ளது.

கண்ணாமூச்சி ஆட்டம்

தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் நகை வாங்க பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்

சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.424 அதிகரித்திருப்பது நகை பிரியர்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரித்து சவரன் ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,500-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.68.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here