நடிகர் அருண்விஜய் ரோட்டுக் கடையில் உணவருந்தும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பு

இயக்குநர் ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார். அருண்விஜய்யின் 33-வது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் பரபரப்பான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அம்மாவின் அன்பு

அப்போது மதிய உணவு இடைவேளையின் போது, நடிகர் அருண்விஜய் அருகே இருந்த ரோட்டுக் கடைக்கு சென்றார். அவரைப் பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர். பின்னர் உள்ளே சென்ற அருண்விஜய் மற்றும் படக்குழுவினர் சிலர், உணவு அருந்தினர். அவர்களுக்கு மீன் குழம்பும், மீன் வறுவலும் பரிமாறப்பட்டது. அங்கு எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள அருண்விஜய், “ரோட்டுக் கடையில் உணவருந்திய போது.. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here