விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நடிகர் விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூலித்து வந்த நிலையில், தற்போது 28 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here