நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேந்தவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுன், தன்னை கைது செய்யவே முடியாது என்றும் அது கனவில் தான் நடக்கும் எனவும் காவல்துறையினருக்கு சவால் விட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு கேரளாவில் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here