ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 23 வயதான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா, துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். 6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58  மீட்டர் தூரம் ஈட்டி

எறிந்து சாதனை படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here