சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பேரின் பாராட்டுகளை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3-ம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பேரன் மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் கனிமொழி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

உருக்கமான பதிவு

மு.கருணாநிதியின் நினைவு தினனத்தையொட்டி அவரது பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ”முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here