நாமக்கல்லை அடுத்த அணியாபுரம் பகுதியில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் மையத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது, வடமாநில இளைஞர் ஒருவர் இயந்திரத்தின் பின்புறத்தில் ஓட்டையிட்டு அதனை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்றது தெரியவந்தது. இதனை கண்ட போலீசார் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியை சேர்ந்த உபேந்திர ராய் என்பதும், மோகனூர் அருகே பரளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கம் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. போலீசார் திறமையாக செயல்பட்டதால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ 2.65 லட்சம் ரொக்கம் தப்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here