பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஆர்.கே.சுரேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையில் தனது தரப்பு ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொடுத்துள்ளதாக கூறினார். தான் எந்த மோசடியும் செய்யவில்லை என்றும் தன்மீது எந்தத் தவறும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here