ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களிடம் கூறியதாவது; மதன் தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் வேலைப்பார்த்து வந்தார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் ஓய்வு எடுப்பார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்தச் சொத்துக்களையும் வாங்கவில்லை. எங்களிடம் இரண்டு சொகுசு கார்கள் இருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. 
சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டில் கூட குடியிருக்கவில்லை. நான் பப்ஜி கேம் விளையாடியதில்லை. மதனுடன் லைவ் சாட்டிங்களில் நான் பேசுவதாக தகவல் வெளியானது. அது, என்னுடைய வாய்ஸ் இல்லை. இவ்வாறு கிருத்திகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here