தனது வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் தனக்கு தொல்லைக் கொடுத்து அவமானப்படுத்தியதால் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பணியிடங்களில் ஆண்கள் மட்டும் பெண்களை மோசமாக நடத்தவில்லை எனவும் பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடந்துகொள்வதாகவும் கூறியுள்ளார். கடுமையாக உழைத்து முன்னேறிய மூத்த நபர், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களை அவமானப்படுத்துவதைப் பார்க்கவும் வேதனையாக உள்ளது எனவும் வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here