பெரிய திரையில் படங்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில், OTT-யில் வெளியாகும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருவதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

OTT-க்கு ஆதரவு

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சூர்யா, கார்த்தி, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அவர், தெலுங்கு திரையுலகிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்த பேட்டி ஒன்றில், OTT தளங்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ரசிகர்கள் அதிகம்

ரகுல் ப்ரீத சிங் கூறியிருப்பதாவது; OTT தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன்மூலம் நடிகர் – நடிகைகள், இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம். இதனால் ரசிகர்களின் பார்வை OTT பக்கம் திரும்பி இருக்கிறது. பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் தற்போது OTT-யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு OTT தளமும் முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். இவ்வாறு நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here